என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை- டீன் பேட்டி
Byமாலை மலர்9 Jun 2021 3:33 AM GMT (Updated: 9 Jun 2021 3:33 AM GMT)
சின்ன குழந்தை என்பதால் விரல் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவமனை டீனுமான ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தபோது ‘டிரிப்’ சென்ற லைனை பிரித்துள்ளார்கள். குழந்தை கையை அசைத்தபோது பெருவிரலின் நுனிபாகம் துண்டாகி விட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், அந்த குழந்தைக்கு தையல் போட்டு இருக்கிறார்.
தையல் போட்டு இருப்பதால் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என அறிய 3 நாட்கள் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு முதல் நாள் ஆகி இருக்கிறது. 2 நாட்கள் காத்திருந்து எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு முடிவு செய்யப்படும்.
குழந்தை கையை அசைத்ததால் விரல் துண்டாகி விட்டதாக சொல்வது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த செவிலியர் மன உளைச்சலில் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை. வந்தவுடன் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அந்த செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
செவிலியரின் அலட்சியப்போக்கு காரணமா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணையின் முடிவில்தான் எது உண்மை என்பது தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பு எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் 3 நாட்கள் கழித்துத்தான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவமனை டீனுமான ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தபோது ‘டிரிப்’ சென்ற லைனை பிரித்துள்ளார்கள். குழந்தை கையை அசைத்தபோது பெருவிரலின் நுனிபாகம் துண்டாகி விட்டது. உடனே குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், அந்த குழந்தைக்கு தையல் போட்டு இருக்கிறார்.
தையல் போட்டு இருப்பதால் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என அறிய 3 நாட்கள் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு முதல் நாள் ஆகி இருக்கிறது. 2 நாட்கள் காத்திருந்து எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு முடிவு செய்யப்படும்.
குழந்தை கையை அசைத்ததால் விரல் துண்டாகி விட்டதாக சொல்வது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த செவிலியர் மன உளைச்சலில் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை. வந்தவுடன் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அந்த செவிலியர் மீது தவறு இருந்தால் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
செவிலியரின் அலட்சியப்போக்கு காரணமா? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணையின் முடிவில்தான் எது உண்மை என்பது தெரிய வரும். சின்ன குழந்தை என்பதால் விரல் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது தையலை பிரித்து பார்க்க முடியாது. எலும்பு எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் 3 நாட்கள் கழித்துத்தான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X