என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேக்கரி கடை மீது தாக்குதல்- மதுரை தி.மு.க. நிர்வாகி அதிரடி சஸ்பெண்டு
Byமாலை மலர்8 Jun 2021 7:05 AM GMT (Updated: 8 Jun 2021 7:05 AM GMT)
வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை பாலம் அருகில் அ.தி.மு.க. பிரமுகர் சோனை என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. கடந்த 5-ந்தேதி மாலை கத்தி, கம்புடன் இங்கு வந்த சிலர் பேக்கரியின் கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து சூறையாடினர்.
இதுபற்றி தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பொட்டுலுப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது28), காட்டுபட்டியை சேர்ந்த அறிவுசெல்வம் (19), சோழவந்தான் பெரியமருது (24) ஆகியோர் என தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 3-ந் தேதி போடி நாயக்கன்பட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் பிரகாசம் என்பவரை, கூட்டுறவு சங்க துணை தலைவர் சோணை மகன் அசோக்குமார் அவமதிப்பு செய்ததாக கூறி 3 பேரும் பேக்கரியை அடித்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.
இந்த நிலையில் தி.மு.க. பேரூர் செயலாளர் பிரகாசம் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்டு) வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை பாலம் அருகில் அ.தி.மு.க. பிரமுகர் சோனை என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. கடந்த 5-ந்தேதி மாலை கத்தி, கம்புடன் இங்கு வந்த சிலர் பேக்கரியின் கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து சூறையாடினர்.
இதுபற்றி தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பொட்டுலுப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது28), காட்டுபட்டியை சேர்ந்த அறிவுசெல்வம் (19), சோழவந்தான் பெரியமருது (24) ஆகியோர் என தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 3-ந் தேதி போடி நாயக்கன்பட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் பிரகாசம் என்பவரை, கூட்டுறவு சங்க துணை தலைவர் சோணை மகன் அசோக்குமார் அவமதிப்பு செய்ததாக கூறி 3 பேரும் பேக்கரியை அடித்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.
இந்த நிலையில் தி.மு.க. பேரூர் செயலாளர் பிரகாசம் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்டு) வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X