search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆண்டிபட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

    ஆண்டிபட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சாராயம் காய்ச்சும் கும்பல் தொடர்ந்து பிடிபட்டு வருகிறது. தேனி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சிய கும்பல் பிடிபட்ட நிலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆண்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    மயானம் அருகே உள்ள பாறைகளுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், பேய்காமன், ஜெயபாண்டி, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் பேய்காமன், ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×