search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,171 பேர் பாதிப்பு - பெண்கள் உள்பட 20 பேர் பலி

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,171 பேர் பாதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,187 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 456 பேர், சங்ககிரியில் 81 பேர், ஓமலூரில் 60 பேர், ஆத்தூரில் 58 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 55 பேர், வீரபாண்டியில் 53 பேர், சேலம் ஒன்றியத்தில் 50 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 48 பேர், தலைவாசலில் 36 பேர், மகுடஞ்சாவடியில் 35 பேர், வாழப்பாடி, காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 32 பேர், எடப்பாடியில் 27 பேர், பனமரத்துப்பட்டியில் 26 பேர், நங்கவள்ளியில் 25 பேர், மேச்சேரியில் 20, தாரமங்கலம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 18 பேர், ஏற்காட்டில் 16 பேர், மேட்டூரில் 12 பேர், கொங்கணாபுரத்தில் 8 பேர், கொளத்தூரில் 3 பேர், நரசிங்கபுரத்தில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,050 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து 10 ஆயிரத்து 294 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 125-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. .

    சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,084 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×