என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2021 12:45 AM GMT
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி யுவராஜூக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவரை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் யுவராஜ், டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மனைவியிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி யுவராஜ் சென்றார். அங்கு உள்ள கழிவறையில் அரைஞான் கயிற்றால் ஜன்னலில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். கழிவறைக்கு சென்ற யுவராஜ் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கோகிலா அங்கு சென்று பார்த்தபோது யுவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி யுவராஜூக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவரை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் யுவராஜ், டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மனைவியிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி யுவராஜ் சென்றார். அங்கு உள்ள கழிவறையில் அரைஞான் கயிற்றால் ஜன்னலில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். கழிவறைக்கு சென்ற யுவராஜ் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கோகிலா அங்கு சென்று பார்த்தபோது யுவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X