என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்டூர் அருகே சாராயம் விற்றவர் கைது
Byமாலை மலர்3 Jun 2021 3:32 PM GMT
கோட்டூர் அருகே வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் 100 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
கோட்டூர்:
கோட்டூர் அருகே கெழுவத்தூர் ஊராட்சி மாணங்காத்தான் கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது42). இவரது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பெருகவாழ்ந்தான் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் லோகநாதன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் 100 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு லோகநாதனை விசாரணைக்காக அழைத்து வரும் வழியில் போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோககநாதனை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று பெருவிடைமருதூர் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X