search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோட்டூர் அருகே சாராயம் விற்றவர் கைது

    கோட்டூர் அருகே வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் 100 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
    கோட்டூர்:

    கோட்டூர் அருகே கெழுவத்தூர் ஊராட்சி மாணங்காத்தான் கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது42). இவரது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பெருகவாழ்ந்தான் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் லோகநாதன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் 100 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு லோகநாதனை விசாரணைக்காக அழைத்து வரும் வழியில் போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோககநாதனை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று பெருவிடைமருதூர் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×