என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சத்தால் விபரீத முடிவு: கணவன்-மனைவி, மகளுடன் தற்கொலை
Byமாலை மலர்3 Jun 2021 6:46 AM GMT (Updated: 3 Jun 2021 6:46 AM GMT)
கொரோனா பயத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி:
திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் டில்லி (வயது74). இவரது மனைவி மகேஸ்வரி (64), இவர்களது மகள் நாகேஸ்வரி (34).
இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மகேஸ்வரியின் அண்ணனான ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி வெங்கட்ராமன் தனது வீட்டில் மாடியில் அவர்களை தங்க வைத்து இருந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் அடைந்த அவர்கள் மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
ஆனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாகி வந்தது. இதுபற்றி அவர்கள் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.
ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் டில்லி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு டில்லி அவரது மனைவி மகேஸ்வரி, மகள் நாகேஸ்வரி ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இரவு நீண்ட நேரம் வரை டில்லி வீட்டில் இருந்து சத்தம் வராததால் சந்தேகம் அடைந்த கீழ் வீட்டில் வசித்த வெங்கட்ராமன் சென்று பார்த்தார்.
அப்போது டில்லி, அவரது மனைவி, மகளுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்தது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ம் ஆண்டு அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நாகேஸ்வரி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
கடந்த 2 வருடத்துக்கு முன்பு கணவருடன் விவாகரத்து பெற்று இருந்தார். இந்த நிலையில் அவரும், பெற்றோருடன் சேர்ந்து கொரோனா பாதிப்பு அச்சத்தில் தற்கொலை செய்து உள்ளார்.
கொரோனா பயத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் டில்லி (வயது74). இவரது மனைவி மகேஸ்வரி (64), இவர்களது மகள் நாகேஸ்வரி (34).
இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மகேஸ்வரியின் அண்ணனான ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி வெங்கட்ராமன் தனது வீட்டில் மாடியில் அவர்களை தங்க வைத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டில்லிக்கு காய்ச்சலுடன் இருமல் இருந்தது. சில நாட்களில் அவரது மனைவி மகேஸ்வரி, மகள் நாகேஸ்வரி ஆகியோரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் அடைந்த அவர்கள் மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
ஆனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாகி வந்தது. இதுபற்றி அவர்கள் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.
ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் டில்லி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு டில்லி அவரது மனைவி மகேஸ்வரி, மகள் நாகேஸ்வரி ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இரவு நீண்ட நேரம் வரை டில்லி வீட்டில் இருந்து சத்தம் வராததால் சந்தேகம் அடைந்த கீழ் வீட்டில் வசித்த வெங்கட்ராமன் சென்று பார்த்தார்.
அப்போது டில்லி, அவரது மனைவி, மகளுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்தது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ம் ஆண்டு அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நாகேஸ்வரி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
கடந்த 2 வருடத்துக்கு முன்பு கணவருடன் விவாகரத்து பெற்று இருந்தார். இந்த நிலையில் அவரும், பெற்றோருடன் சேர்ந்து கொரோனா பாதிப்பு அச்சத்தில் தற்கொலை செய்து உள்ளார்.
கொரோனா பயத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X