search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    நாமக்கல்லில் பின்னோக்கி வந்த லாரி மோதி டிரைவர் பலி

    நாமக்கல்லில் பின்னோக்கி வந்த லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் சாவடித்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 62). லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு என்.புதுப்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் ரெயில்வே கூட்ஸ்ஷெட் அருகில் லாரி டயர் பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து அவர் லாரியை நிறுத்தி விட்டு பின்புற டயருக்கு கல் வைக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி பின்நோக்கி வந்து முத்துசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×