என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் பின்னோக்கி வந்த லாரி மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்2 Jun 2021 3:02 PM GMT (Updated: 2 Jun 2021 3:02 PM GMT)
நாமக்கல்லில் பின்னோக்கி வந்த லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் சாவடித்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 62). லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு என்.புதுப்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் ரெயில்வே கூட்ஸ்ஷெட் அருகில் லாரி டயர் பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து அவர் லாரியை நிறுத்தி விட்டு பின்புற டயருக்கு கல் வைக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி பின்நோக்கி வந்து முத்துசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X