என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்
தக்கலை:
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த 65 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அந்த நோயாளி திடீரென தலைமறைவானார். அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர் ஆய்வு செய்த போது நோயாளியை காணவில்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அந்த நோயாளி வீட்டிற்கும் செல்லவில்லை என தெரியவந்தது. ஏற்கனவே இந்த நோயாளியின் மகன் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருந்து வருகிறார்.
தற்போது இதற்கிடையே சுகாதார ஊழியர்களும் அந்த நோயாளியை தேடி வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் நோயாளி ஒருவர் தப்பி ஓடியது தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்