search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து?- இன்று முதலமைச்சர் ஆலோசனை

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பிரதமர் மோடி

    இதனிடையே, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று மாலை அறிவித்தார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

    தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பொதுத்தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொதுத்தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 
    Next Story
    ×