search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொம்மிடி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

    பொம்மிடி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    அரூர் உட்கோட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் அரூர் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் மங்களகொட்டாய், சின்ன ஊத்துக்குளி மற்றும் கணிதன் கொட்டாய், நாகாலம்மன் கோம்பை ஆகிய பகுதிகளில் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி பகுதியில் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சாராயம் காய்ச்சியதாக ஊத்துகுளியை சேர்ந்த சின்னசாமி மகன் சுரேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×