என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி முகாம்](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106011709428397_Tamil_News_Tamil-News-Covid-19-Vaccine-camp-near-Pavoorchatram_SECVPF.gif)
X
கொரோனா தடுப்பூசி முகாம்
பாவூர்சத்திரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
By
மாலை மலர்1 Jun 2021 11:39 AM GMT (Updated: 1 Jun 2021 11:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பாவூர்சத்திரம் அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இருளப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் வட்டார பகுதிகளான பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், மந்தியூர், மீனாட்சிபுரம், பிள்ளைகுளம், ஐந்தாம் கட்டளை, வடமலைப்பட்டி, ஏ.பி.நாடானூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கபசுர குடிநீர் வழங்கினார். வீராசமுத்திரம் ஊராட்சியில் மசூது என்பவரின் வீடு மின்கசிவால் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அந்த வீட்டையும் அவர் பார்வையிட்டார்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், அருவேல்ராஜ், நகர செயலாளர் சங்கர், தொகுதி செயலாளர் ராதா, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி, ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இருளப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் வட்டார பகுதிகளான பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், மந்தியூர், மீனாட்சிபுரம், பிள்ளைகுளம், ஐந்தாம் கட்டளை, வடமலைப்பட்டி, ஏ.பி.நாடானூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கபசுர குடிநீர் வழங்கினார். வீராசமுத்திரம் ஊராட்சியில் மசூது என்பவரின் வீடு மின்கசிவால் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அந்த வீட்டையும் அவர் பார்வையிட்டார்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், அருவேல்ராஜ், நகர செயலாளர் சங்கர், தொகுதி செயலாளர் ராதா, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி, ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)