என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் போலீசார் சார்பாக கொரோனா விழிப்புணர்வு சாலை ஓவியங்கள்
Byமாலை மலர்29 May 2021 10:43 AM GMT (Updated: 29 May 2021 10:43 AM GMT)
திருவள்ளூர் காமராஜர் சாலை, திருவள்ளூர் ஆயில் மில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே என மூன்று இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீசார் ஓவியர்கள் சங்கங்கள் மூலம் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளான திருவள்ளூர் காமராஜர் சாலை, திருவள்ளூர் ஆயில் மில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே என மூன்று இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் கொரோனாவை ஒழிப்போம், முக கவசம் உயிர் கவசம் என்ற வாசகம் வரையப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ராக்கி குமாரி மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீசார் ஓவியர்கள் சங்கங்கள் மூலம் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளான திருவள்ளூர் காமராஜர் சாலை, திருவள்ளூர் ஆயில் மில் பகுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே என மூன்று இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சாலையில் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் கொரோனாவை ஒழிப்போம், முக கவசம் உயிர் கவசம் என்ற வாசகம் வரையப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ராக்கி குமாரி மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X