search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடையம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

    16 வயதான அந்த சிறுமி கடந்த 22-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    எனவே இது தொடர்பாக சிறுமியின் தாத்தா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்ற வாலிபர் திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கயற் கண்ணி விசாரணை நடத்தி, சரத்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சிறுமியை மீட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×