என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளாத்திகுளத்தில் சிறுமிக்கு திருமணம்- வாலிபர் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்25 May 2021 10:55 AM GMT (Updated: 25 May 2021 10:55 AM GMT)
விளாத்திகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள்பானு தலைமையிலான போலீசார் மேலமாந்தைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி சமூக நல அலுவலர் பொன்னுமாரி விளாத்திக்குளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மாரிமுத்து (வயது 27), அவரது தந்தை சர்க்கரை (56), அவரது தாய் காமாட்சி (51), சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகே மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள்பானு தலைமையிலான போலீசார் மேலமாந்தைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி சமூக நல அலுவலர் பொன்னுமாரி விளாத்திக்குளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மாரிமுத்து (வயது 27), அவரது தந்தை சர்க்கரை (56), அவரது தாய் காமாட்சி (51), சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X