என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தையை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்20 May 2021 2:39 AM GMT (Updated: 20 May 2021 2:39 AM GMT)
விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசேந்திரன். விவசாயியான இவரது மகன் கதிர்வேல்(வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கொரோனா முழு அடைப்பு காரணமாக இவர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டில் இருந்து நிறுவன பணிகளை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 வயதில் அன்புச்செல்வன் என்ற மகன் இருந்தான்.
இவரது வீட்டின் அருகில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கதிர்வேலின் குழந்தை அன்புச்செல்வன் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை அன்புச்செல்வன் மீது விழுந்தது.
அதைப்பார்த்த கதிர்வேல் உடனடியாக ஓடிச்சென்று தனது குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை அன்புச்செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
தஞ்சை மாவட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசேந்திரன். விவசாயியான இவரது மகன் கதிர்வேல்(வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கொரோனா முழு அடைப்பு காரணமாக இவர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டில் இருந்து நிறுவன பணிகளை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 வயதில் அன்புச்செல்வன் என்ற மகன் இருந்தான்.
இவரது வீட்டின் அருகில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கதிர்வேலின் குழந்தை அன்புச்செல்வன் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை அன்புச்செல்வன் மீது விழுந்தது.
அதைப்பார்த்த கதிர்வேல் உடனடியாக ஓடிச்சென்று தனது குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை அன்புச்செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X