search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

    ஆம்பூர் நகரில் நேற்று ஆம்பூர் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் நகரில் நேற்று ஆம்பூர் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. கலெக்டர் சிவன்அருள் மற்றும் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராமு, ஆம்பூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்தர்ராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×