என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூரில் குப்பை கிடங்கில் தீ- புகைமூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்18 May 2021 10:25 AM GMT (Updated: 18 May 2021 10:25 AM GMT)
கூத்தாநல்லூரில் உள்ள குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இதனால் புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியின் குப்பை கிடங்கு, குனுக்கடி கிராமத்தையொட்டி உள்ள ஒரு வயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குப்பை கிடங்கில் கூத்தாநல்லூர் நகராட்சியின் 24 வார்டுகளில் உள்ள தெருக்களில் இருந்து சேகரமாகும் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மூட்டம் பரவியது. வெயில் கடுமையாக இருந்த நேரத்தில் புகை மூட்டமும் பரவியதால் பொாதுமக்கள் அவதிப்பட்டனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, என்ஜினீயர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்து புகை மூட்டம் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியின் குப்பை கிடங்கு, குனுக்கடி கிராமத்தையொட்டி உள்ள ஒரு வயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குப்பை கிடங்கில் கூத்தாநல்லூர் நகராட்சியின் 24 வார்டுகளில் உள்ள தெருக்களில் இருந்து சேகரமாகும் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மூட்டம் பரவியது. வெயில் கடுமையாக இருந்த நேரத்தில் புகை மூட்டமும் பரவியதால் பொாதுமக்கள் அவதிப்பட்டனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, என்ஜினீயர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்து புகை மூட்டம் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X