என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூரில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்17 May 2021 12:35 PM GMT (Updated: 17 May 2021 12:35 PM GMT)
பரமத்திவேலூரில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள 2 ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மணிவேல் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு சென்று உணவகங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூர்யா என்பவருக்கு சொந்தமான ஓட்டலுக்கு போலீசார் சீல் வைத்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் மற்றொரு ஓட்டல் உரிமையாளர் வரதராஜனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், ஓட்டல்களுக்கு உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X