என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளிச்சந்தை அருகே மனைவியை கொன்ற கணவன் கைது
Byமாலை மலர்17 May 2021 9:34 AM GMT (Updated: 17 May 2021 9:34 AM GMT)
வெள்ளிச்சந்தை அருகே மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது37). இவரது மனைவி உமா(33). இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு உமா வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது திடீரென ரமேஷ் மனைவியை அரிவாளால் வெட்டினார். உமாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உமா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரமேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் ரமேசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது37). இவரது மனைவி உமா(33). இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு உமா வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது திடீரென ரமேஷ் மனைவியை அரிவாளால் வெட்டினார். உமாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உமா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரமேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் ரமேசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X