search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாடிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

    வாடிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அய்யங்கோட்டை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் கூறினார். பின் அவர் மஞ்சள் பையில் 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்தோடு, ரூ.4030-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×