search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து பெண் தற்கொலை
    X
    தீக்குளித்து பெண் தற்கொலை

    ஒரத்தநாடு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

    ஒரத்தநாடு அருகே உடல்நலக்குறைவால் விரக்தியில் உடலில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு வட்டம் கக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி குறளரசி (42). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 9-ந்தேதி தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த குறளரசியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறளரசி உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×