search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்கு சீல்
    X
    கடைக்கு சீல்

    கொரோனா ஊரடங்கு விதிமீறல்: நீடாமங்கலத்தில் மொத்த வியாபார கடைக்கு சீல்

    கொரோனா ஊரடங்கு வீதிமீறல் காரணமாக நீடாமங்கலத்தில் மொத்த வியாபார கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலத்தில் நேற்று கொரோனா விதி மீறல்கள் உள்ளனவா? என்பது குறித்து நீடாமங்கலம் தாசில்தார் மணிமன்னன், மண்டல துணை தாசில்தார் அறிவழகன், கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நீடாமங்கலம் கடைவீதியில் விதிமுறைகளை மீறி நடத்தி வந்த மொத்தவியாபார மிட்டாய் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    அதனை தொடர்ந்து நடந்த ஆய்வில் விதிமுறைகளை மீறிய 3 மளிகைக்கடைகளுக்கு தலா ரூ.500 மற்றும் ஒரு டீக்கடைக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

    சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடத்தப்படும் கடைகளுக்கும், முககவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×