என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் மோதி விபத்து- டிரைவர் பலி
Byமாலை மலர்13 May 2021 1:11 PM GMT (Updated: 13 May 2021 1:11 PM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி மீது அரிசி ஏற்றிச்சென்ற மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:
ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி (வயது 25). லாரி டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அதிகாலை சூலூர்பேட்டையில் இருந்து சென்னை செங்குன்றம் நோக்கி லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது முனுசாமி ஓட்டிச்சென்ற அரிசி லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முனுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடல் பிரேத கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X