search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் நாடு அரசு
    X
    தமிழ் நாடு அரசு

    மே 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகளில் ரூ. 2000 வழங்கப்படும்

    ரே‌ஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரே‌ஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கியதை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ரே‌ஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    இதையொட்டி நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரே‌ஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோப்பு படம்


    அதில் மே 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகளில் ரூ. 2000 வழங்கப்படும்.

    ஞாயிறன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை  நிவாரண நிதி  ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும்.

    ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×