search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 180 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    கொரோனாவின் தாக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 120 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 17 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 22 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 21 பேரும் என மொத்தம் 180 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,518 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,779 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 708 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,046 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    மாவட்டத்தில் நேற்று 590 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 55 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 35 ஆயிரத்து 346 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி ஆயிரத்து 957 பேருக்கும் என மொத்தம் 37 ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
    Next Story
    ×