search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தஞ்சை மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு: ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா

    நேற்று 428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் குணமடைபவர்களை விட புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று 428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் குணமடைபவர்களை விட புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 372 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 2941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சிகிச்சை பலனின்றி 7 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 339-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×