என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு: ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே நேற்று 428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் குணமடைபவர்களை விட புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 372 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 2941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சிகிச்சை பலனின்றி 7 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 339-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அச்சமடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்