search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    பாலக்கோடு அருகே வனம்பட்டி பகுதியில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே உள்ள மாந்தோப்பில் வனம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (வயது 32), விமலன் (38), அருள் (35) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    மாரண்டஅள்ளி அருகே போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மாரண்டஅள்ளியை சேர்ந்த சுப்ரமணி (41), விசன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×