என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் கொரோனா விதிமுறை மீறல்: 2 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்30 April 2021 11:26 AM GMT (Updated: 30 April 2021 11:26 AM GMT)
கொரோனா பரவலை தடுக்க 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாமக்கல்:
கொரோனா பரவலை தடுக்க 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படுகிறதா? என நேற்று நாமக்கல்லில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை என 2 கடைகள் இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு கடைகளுக்கும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோன்ற விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X