search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை 5.50 லட்சத்தை தாண்டியது

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தற்போது தினமும் 3,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாநகரில் மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 15-ந்தேதிக்கு பிறகு கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15-ந்தேதி 3,157 பேருக்கு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தினமும் 2,500 முதல் 3,500 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 26-ந்தேதி 2,660 பேருக்கும், 27-ந்தேதி 3,500 பேருக்கும், 28-ந்தேதி 3,554 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 53 ஆரத்து 716 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரத்து 264 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 22,476 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×