search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொம்மிடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    பொம்மிடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பொம்மிடி:

    பொம்மிடி அருகே உள்ள நடூர் காட்டுவளவுவை சேர்ந்தவர் நடேசன் (வயது 66). விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தீராத வயிற்று வலியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நடேசன் உயிரிழந்தார். 

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×