என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் தீ விபத்து- ரூ. 2 லட்சம் பொருட்கள் நாசம்
Byமாலை மலர்29 April 2021 11:10 AM GMT (Updated: 29 April 2021 11:10 AM GMT)
கூத்தாநல்லூர் அருகே மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, சின்னக்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது40). இவர் வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் கடைவீதியில் மர இழைப்பகம் நடத்தி வருகிறார். வழக்கம்போல், கடையில் நடைபெற்ற மர இழைப்பு வேலைகள் முடிந்த பின் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு முருகேசன் சின்னக்கொத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென மர இழைப்பக கடையின் உள்பக்கம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மர இழைப்பக எந்திரங்கள் உட்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மரப்பட்டறையில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. அதிகாலையில் மரப்பட்டறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X