search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முரசு கொட்டி ஆர்ப்பாட்டம்

    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தொண்டர் இயக்கத்தின் சார்பில் மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தூத்துக்குடி:

    ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கிராமமக்கள் வீடுகளின் முன்பு இன்று கருப்பு கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் எந்த காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தொண்டர் இயக்கத்தின் சார்பில் மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். டூவிபுரத்தில் அவர் கருப்பு சட்டை அணிந்து ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற பதாகை வைத்து முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    Next Story
    ×