search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வரதட்சணை கொடுமை: தீக்குளித்த பெண் உயிரிழப்பு

    உளுந்தூர்பேட்டை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அரசூர்:

    உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிபாலன் . இவரது மனைவி அஞ்சலாட்சி ( வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மணிபாலன் அஞ்சலாட்சியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த அஞ்சலாட்சி தென்மங்கலம் கிராமத்தில் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு வந்தும், மணிபாலன் வரதட்சணை கேட்டு திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர், அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அஞ்சலாட்சியின் தாய் சோலையம்மாள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் அஞ்சலாட்சியின் கணவர் மணிபாலன், மாமனார் தேவராஜ், மாமியார் கனகவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×