என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கொலை வழக்கு கைதி திடீர் உயிரிழப்பு
Byமாலை மலர்29 April 2021 9:16 AM GMT (Updated: 29 April 2021 9:16 AM GMT)
மதுரையில் கொலை வழக்கு கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுருளிப்பட்டி ஓ.எம்.ஆர். தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவர் மீது தேனி மாவட்டம் கம்பம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கண்ணன் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் இருமல், காய்ச்சல் ஏற்பட்டது.
அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் கண்ணன் தொடர்ந்து காசநோயால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரி வசந்த கண்ணன் புகாரின் பேரில் மதுரை அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுருளிப்பட்டி ஓ.எம்.ஆர். தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவர் மீது தேனி மாவட்டம் கம்பம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கண்ணன் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் இருமல், காய்ச்சல் ஏற்பட்டது.
அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் கண்ணன் தொடர்ந்து காசநோயால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரி வசந்த கண்ணன் புகாரின் பேரில் மதுரை அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X