என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வண்ணார்பேட்டை டெப்போவில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் தினசரி தொற்று 400-க்கும் மேல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மாவட்டம் முழுவதும் 80-க்கு மேற்பட்ட முகாம்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கு பணியாற்றும் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசிகள் போட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 70 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் இன்று 2-ம் கட்டமாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. 150 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிற்பகல் வரை 40 பேருக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த பணிகளை தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ பார்வையிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்