search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 617 பேர் தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 196 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 48 பேர் பாதிப்பில் இருந்து மீண்டனர். மாவட்டத்தில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 371 பேர் குணமாகி உள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 617 பேர் தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை மருத்துவ குழுவினர் நேரில் சென்று வழங்கினர். மேலும் அவர்களின் உடல் நிலையை அன்றாடம் பரிசோதித்து வருகின்றனர். பாதிப்பு அதிகரித்துள்ளதால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×