என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 10 ஊழியர்களுக்கு கொரோனா
Byமாலை மலர்20 April 2021 7:43 PM GMT (Updated: 20 April 2021 7:43 PM GMT)
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர்கள் மற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
மேலும் ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அணு விஜய் நகரிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 3 நாட்களில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களுக்கு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர்கள் மற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
மேலும் ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அணு விஜய் நகரிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 3 நாட்களில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களுக்கு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X