search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது

    கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ரங்கே கவுடர் வீதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்கிற காந்திகண்ணன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, ரூ. 9 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×