என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 307 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்18 April 2021 9:26 PM GMT (Updated: 19 April 2021 7:43 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 217-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 956-ஆக உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 50-க்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 200-ஐ தாண்டி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 307 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 217-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 956-ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதித்த 2 ஆயிரத்து 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சிகிச்சை பலன் இன்றி 231 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 50-க்கு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 200-ஐ தாண்டி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 307 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X