search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின் கம்பம் ஒயரில் சாய்ந்து விழுந்ததில் தர்மபுரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

    திருத்துறைப்பூண்டி அருகே சோலார் விளக்குகளை சரிசெய்தபோது மின் கம்பம் ஒயரில் சாய்ந்து விழுந்ததில் தர்மபுரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இது சம்பந்தமான டிஜிட்டல் போர்டு வைக்கும் பணிக்காக தர்மபுரியை சேர்ந்த செந்தில் (வயது 34), தமிழ்செல்வன் (28) உள்பட 11 பேர் விட்டுகட்டி கிராமத்துக்கு வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று பஞ்சாயத்து சார்பில் சோலார் மின்விளக்கு பழுது பார்க்க வேண்டும் என்று செந்திலிடம் ஊர் தலைவர் கேட்டு கொண்டார். அதனை ஏற்று கம்பத்தில் ஏறி சோலார் விளக்குகளை செந்தில் கழற்றி கொண்டிருந்தார். கம்பத்தின் கீழே தமிழ்செல்வன் நின்றிருந்தார்.

    அப்போது திடீரென கம்பம் சரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த மின்வயரில் சாய்ந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் தமிழ்செல்வன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    Next Story
    ×