என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் துணிகள் எரிந்து நாசம்
Byமாலை மலர்17 April 2021 9:44 PM GMT (Updated: 18 April 2021 10:06 AM GMT)
திருப்பூர் 15 வேலம்பாளையம் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. நேற்று இந்த நிறுவனத்தின் 2-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் 2-வது மாடி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் முழுவதும் பனியன் துணிகள் இருந்ததால் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் போராடி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. நேற்று இந்த நிறுவனத்தின் 2-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் 2-வது மாடி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் முழுவதும் பனியன் துணிகள் இருந்ததால் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் போராடி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X