search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

    ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Next Story
    ×