search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள மலைபட்டியை சேர்ந்தவர் மாரிஸ்குமார். இவரது மனைவி பிரியா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகிறது.

    இந்நிலையில் நேற்று பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென வி‌ஷம் குடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பிரியா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளத்தை சேர்ந்தவர் சேதுராஜ் (32), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேதுராஜ் வேலைக்கு செல்லாமல் ஊரில் சுற்றி வந்துள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த சேதுராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×