என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள மலைபட்டியை சேர்ந்தவர் மாரிஸ்குமார். இவரது மனைவி பிரியா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகிறது.
இந்நிலையில் நேற்று பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பிரியா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளத்தை சேர்ந்தவர் சேதுராஜ் (32), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேதுராஜ் வேலைக்கு செல்லாமல் ஊரில் சுற்றி வந்துள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த சேதுராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்