என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தம்
Byமாலை மலர்15 April 2021 10:34 AM GMT (Updated: 15 April 2021 10:34 AM GMT)
மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலைச் சார்ந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்கத்தை கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்க கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
இந்த காலங்களில் மீன்கள் இறால், நண்டு ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேற்கண்ட 3 மாதங்களில் மீனவர்கள் குடும்பத்தை நடத்த வேறு வேலை தேடி செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று (15-ந்தேதி) முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் கடலுக்கு சென்று இருந்த ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினார்கள்.
தடை காலத்தை முன்னிட்டு கடலுக்குள் செல்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலைச் சார்ந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்க கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
இந்த காலங்களில் மீன்கள் இறால், நண்டு ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேற்கண்ட 3 மாதங்களில் மீனவர்கள் குடும்பத்தை நடத்த வேறு வேலை தேடி செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று (15-ந்தேதி) முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் கடலுக்கு சென்று இருந்த ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினார்கள்.
தடை காலத்தை முன்னிட்டு கடலுக்குள் செல்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலைச் சார்ந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X