என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து - தொழிலாளி பலி
Byமாலை மலர்13 April 2021 2:16 AM GMT (Updated: 13 April 2021 10:46 AM GMT)
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த பண்ணாரி மகன் ராமன் (வயது 24). இவர் கோவையில் உள்ள இரும்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பல்லடம் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள் (20) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியம்மாள் துத்தாரிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமன் தனது மனைவியைப் பார்க்க மோட்டார்சைக்கிளில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்துள்ளார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி என்ற இடம் அருகே வரும்போது. எதிரே வந்த வேன், எதிர்பாராதவிதமாக ராமன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த பண்ணாரி மகன் ராமன் (வயது 24). இவர் கோவையில் உள்ள இரும்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பல்லடம் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள் (20) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியம்மாள் துத்தாரிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமன் தனது மனைவியைப் பார்க்க மோட்டார்சைக்கிளில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்துள்ளார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி என்ற இடம் அருகே வரும்போது. எதிரே வந்த வேன், எதிர்பாராதவிதமாக ராமன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X