search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

    திருமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் புகாரி(வயது 53). இவர் கப்பலுரில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து புகாரி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த புகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×