என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊழியருக்கு தொற்று- அவினாசி தாசில்தார் அலுவலகம் மூடல்
அவினாசி:
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பணியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி தாசில்தார் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் கருவலூர் பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவினாசி தாசில்தார் அலுவலகம் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை சான்றிதழ் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அவினாசி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அலுவலக வளாகத்திற்குள் உள்ள இ-சேவை மையம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கிளை சிறை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்