என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
Byமாலை மலர்10 April 2021 2:30 PM GMT (Updated: 10 April 2021 2:30 PM GMT)
சாத்தான்குளம் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவமனை சித்த பிரிவு சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கி, கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வைகுண்டரமணி முன்னிலை வகித்தார். இதில் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், வருவாய்த்துறை முதுநிலை உதவியாளர்கள் கணேஷ்குமார், சின்னத்துரை, மருந்தாளுனர் சங்கரமணி, பன்னம்பாறை இயற்கை உணவு மற்றும் நல்வாழ்வு மைய நிர்வாக இயக்குனர் ஜோதி தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மருந்தாளுனர் ராஜேஸ்வரி, மருத்துவ பணியாளர்கள் சிவசைலம், பாண்டியம்மாள், மந்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவமனை சித்த பிரிவு சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கி, கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வைகுண்டரமணி முன்னிலை வகித்தார். இதில் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், வருவாய்த்துறை முதுநிலை உதவியாளர்கள் கணேஷ்குமார், சின்னத்துரை, மருந்தாளுனர் சங்கரமணி, பன்னம்பாறை இயற்கை உணவு மற்றும் நல்வாழ்வு மைய நிர்வாக இயக்குனர் ஜோதி தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மருந்தாளுனர் ராஜேஸ்வரி, மருத்துவ பணியாளர்கள் சிவசைலம், பாண்டியம்மாள், மந்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X