search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வளவனூர்:

    விழுப்புரம் அருகே உள்ள வளவனூரில் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரசித்தி பெற்ற கோணம்மாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக வளவனூரை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    உடனே கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள இரும்பினால் ஆன உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×